தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – AICTE அனுப்பிய சுற்றறிக்கை!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் AICTE கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் அதன் உறுப்பு கல்லூரி ஆகியவற்றில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 5ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் இணையதளம் வாயிலாக பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
மாணவர்களுக்கு தொடங்கிய நாள் முதல் தற்போது வரை பொறியியல் படிப்பில் சேர சுமார் 1,29,192 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 79,896 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இந்த பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் AICTE பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ஜூலை 31 க்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் செப்டம்பர் 10ம் தேதிக்குள் முதல் கட்ட மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பிறகு செப்டம்பர் 15ம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.