உயர்கல்வியை தொடர்வதற்கான SEEDS உதவித்தொகை – உடனே விண்ணப்பிக்கவும்!
அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடரை இருக்கும் மாணவர்கள் சீட்ஸ் உதவித்தொகை பெறுவதற்கு வரும் மே 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீட்ஸ் (SEEDS):
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சீட்ஸ் (SEEDS) சேவையின் மூலமாக பல்வேறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித் தொகையை பெறுவதற்கு 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பாலிடெக்னிக், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் சீட்ஸ் (SEEEDS) உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சீட்ஸ் உதவித்தொகை பெறுவதற்கான தகுதி குறித்தான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – AICTE அனுப்பிய சுற்றறிக்கை!
அதாவது, 12 ஆம் வகுப்பில் குறைந்தது 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களில் இருந்து இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க இயலும். மேலும், பொறியியல் பிரிவில் 480 க்கும் அதிகமான மதிப்பெண் அல்லது 180 க்கும் அதிகமான கட் ஆப் பெற்ற மாணவர்கள் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தவர்கள் மற்றும் நீட் தேர்வில் 500க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட் ஆப் 180 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற துணை மருத்துவர்களும், 480 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற கலை, அறிவியல் அல்லது பிற படிப்பு படிக்கும் மாணவர்களும், பத்தாம் வகுப்பில் 350 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களும் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டதாரி உயர் படிப்பை தொடர்வதற்கான இந்த உதவி தொகையை பெறுவதற்கு மாணவர்கள் https://www.seeds.org அல்லது https://www.seeeds.org/scholarship என்கிற ஆன்லைன் இணையதளம் முகவரி பக்கத்தின் மூலமாக வரும் மே 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.