தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு தற்போது ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பாதிப்பு எண்ணிக்கை குறைவதை பொறுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது . இதனால் மாநிலத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டு உள்ள உத்தரவில் ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது முழு ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 9ம் தேதி காலை 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.