தமிழகத்தில் முழு ஊரடங்கு ஆகஸ்ட் 23 வரை நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்டுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வணிக வளாகங்கள், கடைகள் கல்வி நிலையங்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஓரளவு பாதிப்புகள் குறைந்தவுடன் அரசு கடந்த ஜூன் 14 தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அறிவித்து தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது.
அதன் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளுடன் காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில் செப்.1 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!!
இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன
அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
புதிய கட்டுப்பாடுகள்
- இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனியாக பிரித்து விற்பனை செய்வதை ஆந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்
- அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்
- உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்வதனை உறுதி செய்ய வேண்டும்.
- கடைகளில், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- அனைத்து கடைகளும் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் திறக்கப்பட வேண்டும்.
- அதிக அளவு நபர்களை ஒரே நேரத்தில் அனுமதிக்க கூடாது.
- கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது. ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட வேண்டும்.
- மேற்டி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு, அதிகஅளவு வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளபடும்