தமிழகத்தில் செப்.1 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து தற்போது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
தமிழகத்தில் கடந்த மே மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தொடர்ந்து உத்தரவு நீட்டிக்கப்பட்டது. வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கற்று வருகின்றனர்.
நீலகிரி செல்வோருக்கு ‘இந்த’ சான்றிதழ் கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு!
இப்படியாக இருக்க, கடந்த 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். வகுப்புகளில் 50% மாணவர்களுடன் செயல்படவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.