தமிழகத்தில் உதவி சிறை அலுவலர் பதவி உயர்வு – தலைமை காவலர்கள் கோரிக்கை!!
காவல் துறை பணியாளர்களுக்கு வழங்குவது போல் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த முதல்நிலை தலைமை காவலர்களுக்கும், சிறப்பு உதவி சிறை அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தலைமை காவலர்கள்:
தமிழகத்தில் மொத்தம் 9 மத்திய சிறைகளும், 3 பெண்களுக்கான மத்திய சிறைகளும், 2 திறந்தவெளி சிறைகளும், 12 சிறுவர், சீர்திருத்த பள்ளி சிறைகளும், 9 மாவட்ட சிறைகளும், 89 தாலுகா கிளை சிறைகளும் உள்ளது. தமிழகத்தில் உள்ள இந்த சிறைகளில் தலைமை காவலர்கள் உட்பட மொத்தம் 4,000 பணியாளர்கள் உள்ளனர்.
புதிதாக 12 எஸ்எஸ்பி படைகள் உருவாக்கம் – மத்திய அரசு ஒப்புதல்!!
பதவி உயர்வு கோரிக்கை:
முதல்நிலை தலைமை காவலர் பதவியில் சிறையில் பணியாற்றும் நபர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் விரைவில் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழக காவல் துறையில் பணியாளர்களுக்கு எஸ்.எஸ்.ஐ பதவி உயர்வு வழங்குவது போலவே தங்களுக்கும் சிறப்பு உதவி சிறை அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பணி மூப்பு:
சிறை பணியாளர்கள் இது குறித்து முன்னதாக முன்னாள் முதல்வரிடமும், தற்போதைய முதல்வரிடமும் கோரிக்கை வைத்தும் எந்தவித பதிலும் இல்லை. 2012ம் ஆண்டு பதவி உயர்வு மாவட்ட அளவில் பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது. தற்போது மாநில அளவில் பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு பதவி உயர்வு பெறாமல் உள்ளனர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்