புதிதாக 12 எஸ்எஸ்பி படைகள் உருவாக்கம் – மத்திய அரசு ஒப்புதல்!!
இந்திய நாட்டின் பூடான், நேபாள எல்லைகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிதாக 12 சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்எஸ்பி தலைமை இயக்குனர் அறிவித்துள்ளார்.
சஷஸ்திர சீமா பல் ( எஸ்எஸ்பி ) படை:
சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படையானது இந்தியா – நேபாளம் மற்றும் இந்தியா – பூடான் எல்லைப்பகுதிகளை பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப்படைகளுள் ஒன்றாகும். நாட்டின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்கவும், அந்நிய நாட்டவர் எல்லை ஊடுருவலை தடுக்கவும், சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் இந்த படைகள் அமைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் பள்ளி செல்லவில்லை – ஐ.நா. சபை ஆய்வு!!
எல்லைப் பாதுகாப்பு வீரர்கள்:
இந்தியாவின் எல்லைப் பகுதியில் 1,751 கி.மீ தொலைவை நேபாளமும், 699 கி.மீ தொலைவை பூடானும் பகிர்ந்து கொள்கின்றது. இதற்காக 90,000 வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 13,000 வீரர்களுடன் புதிதாக 12 எஸ்எஸ்பி குழுக்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்எஸ்பி தலைமை இயக்குனர் குமார் ராஜேஷ் சந்திரா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
புதிய குழுக்கள்:
அதன்படி, ஒரு ஆண்டிற்கு 3 புதிய குழுக்கள் வீதம் 4 ஆண்டுகளில் 12 குழுக்கள் சேர்க்கப்படும். அரசின் ஒப்புதல் எஸ்எஸ்பி – க்கு பேருதவியாக இருக்கும் என்றும், புதிதாக வீரர்களை நியமிப்பதால் நாட்டின் எல்லை பாதுகாப்பு மேலும் வலுப்படும் என்றும் இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்