தமிழகத்தில் கலந்த 22 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்தான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகம் முழுவதும் மாநில அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதியுடன் அனைத்து பொதுத்தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி தொடங்கி இன்றுடன் தேர்வுகள் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதியான நாளை முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை தேர்வுகள் அட்டவணைப்படி நடக்க உள்ளது. நடப்பு ஆண்டில் வழக்கத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் நடப்பாண்டில் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால் மாணவர்கள் உயர் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.