10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கு முந்தைய டிப்ஸ் இதோ!

0
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வுக்கு முந்தைய டிப்ஸ் இதோ!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வுக்கு முந்தைய டிப்ஸ் இதோ!10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வுக்கு முந்தைய டிப்ஸ் இதோ!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கு முந்தைய டிப்ஸ் இதோ!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்வுக்கு முன் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகளை இப்பதிவில் காண்போம்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடையவுள்ளது. அடுத்ததாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இதை செய்யாவிட்டால் ஏப்.14ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் – முதல்வருக்கு கடிதம் அனுப்பிய குழந்தைகள்!

ஏற்கனவே 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஏராளமானோர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பெற்றோர்களை தொடர்புகொண்டு மாணவர்கள் விவரங்கள் கேட்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களை தேர்வெழுத வைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் பதற்றமின்றி தேர்வுக்கு முந்தைய நாளே பேனா, ஹால் டிக்கெட் பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து வைத்து கொள்வது நல்லது. மேலும் தேர்வுக்கு செல்லும் போது புதிய பாடங்களில் கவனம் செலுத்தத்தாமல் இதுவரை படித்த வினாக்களை திருப்புதல் செய்ய வேண்டும். காலை வேளையில் துரித உணவுகளை தவிர்த்து மாணவர்கள் எளிய வகையிலான பருப்பு , இட்லி உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வது சிறந்தது. அத்துடன் உங்களது பதிவெண்ணையும் மறவாமல் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!