ஜூன் 5 வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
திரிபுரா மாநிலத்தில் ஜூன் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
திரிபுரா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இம்மாத துவக்கத்தில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் மாதம் 5 ஆம் தேதி காலை வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. தவிர பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதம் முழு ஊரடங்கு நீட்டிப்பு? அரசின் முடிவு என்ன!
முன்னதாக திரிபுராவில் இந்த மாத தொடக்கத்தில் விதிக்கப்பட்ட 24 மணி நேர தடையில்லா ஊரடங்கு உத்தரவானது, இன்று (மே 26) அதிகாலை 5 மணியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது குறித்து மூத்த அமைச்சர் ரத்தன் லால் நாத் கூறுகையில், ‘அகர்தலா மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது தவிர பொது முடக்கத்தின் பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. முகக்கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது போன்ற விதிமுறைகளை புறக்கணித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திரிபுரா மாநிலத்தில் உள்ள ஏழு லட்சம் ஆதரவற்ற குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர கடந்த 24 மணி நேரத்தில் திரிபுராவில் 773 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.