தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு நிலம் கொடுப்போருக்கு ஹாப்பி நியூஸ் – உயரும் வழிகாட்டி மதிப்பு!
தமிழகத்தில் ஆண்டுதோறும் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், வழிகாட்டி மதிப்பு பல ஆண்டுகளாக உயராமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டு, பதிவுக்கட்டணம் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் நிலம் கொடுக்க வேண்டியவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
வழிகாட்டி மதிப்பு உயர்வு
தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு மக்கள் தங்களிடம் உள்ள நிலத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் நிலத்தின் மதிப்பு ஆண்டுக்கு ஒரு முறை உயர்ந்து வரும் நிலையில் வழிகாட்டி மதிப்பு மட்டும் உயராமல் இருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை உயர்த்த குழு அமைக்கப்பட்டு அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி மாநிலம் முழுவதும் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – மார்ச் 25 & 26 தேதிகளில் சேவை நிறுத்தம்!!
அதன் பின் 2017 ஆம் ஆண்டு ஏற்கனவே உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு 33 சதவிகிதம் குறைத்து அரசாணை வெளியானது. மேலும் அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பதிவு கட்டணத்தை ஒரு சதவீகிதத்தில் இருந்து நான்கு சதவீகிதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த அரசாணையால் நிலம் கொடுக்கும் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தற்போது 33 சதவீகித வழிகாட்டி மதிப்பு மீண்டும் உயர்த்தப்பட்டு, பதிவுகட்டணம் இரண்டு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு திட்டங்களுக்கு நிலம் கொடுப்போருக்கு இழப்பீடு அதிகமாக கிடைக்கும் எனவும் கிரய செலவு குறையும் என்பதால் அரசு திட்டங்களுக்கு நிலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்து இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download