ஆமா.. இரண்டாம் திருமணம் தான் செய்ய போறேன்.. 56 தான் வயதில் சன் டிவி சீரியல் நடிகர் எடுத்துள்ள முடிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து, தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருபவர் பப்லு. அவருடைய இரண்டாவது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் பப்லு:
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகர் பிரித்திவிராஜ் என்ற பப்லு. அவர் தற்போது சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். நடிப்புத் துறையில் பல ஆண்டுகளாக இருக்கும் அவர் பினா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 25 வயதில் அஹத் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் இவரது மகனிற்கு ஆட்டிசம் குறைபாடு இருந்ததால் அவர் சில ஆண்டுகள் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருந்தார்.
Follow our Instagram for more Latest Updates
அதன் பின் தற்போது மீண்டும் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் பப்லு தனது மனைவி பினா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியானது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக 56 வயதாகும் பப்லு 23 வயதான மலேசியா பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து தற்போது பப்லு விளக்கம் அளித்து இருக்கிறார்.
நயன்தாரா விஷயத்தில் நடந்தது இதுதான்.. மருத்துவர்கள் வெளியிட்ட பகிர் தகவல் – ஷாக்கில் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
அதில் என்னிடம் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து பலர் போன் செய்து கேட்கின்றனர். முதலில் எல்லாரும் என்னிடம் காமெடிக்காக விளையாடுகிறார்கள் என நினைத்தேன். ஆனால் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை நான் இரண்டாவது திருமணம் செய்யவில்லை. அவ்வாறு செய்தாலும் நான் மறைமுகமாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எல்லாரிடமும் தெரிவித்துவிட்டு தான் செய்வேன் என அவர் ஓபன் டாக் கொடுத்து இருக்கிறார்.