ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த பழமையான வாகனங்கள் தடை உத்தரவு – சிரமத்தில் பொதுமக்கள்!

0
ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த பழமையான வாகனங்கள் தடை உத்தரவு - சிரமத்தில் பொதுமக்கள்!
ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த பழமையான வாகனங்கள் தடை உத்தரவு - சிரமத்தில் பொதுமக்கள்!
ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த பழமையான வாகனங்கள் தடை உத்தரவு – சிரமத்தில் பொதுமக்கள்!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, 15 வருடங்களுக்கு பழமையான வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்

வாகனங்கள் தடை

மத்திய அரசு 2021 மோட்டார் வாகனச் சட்டத்தின் ஸ்கிராப்பிங் பாலிசியின்படி, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து அகற்றி, ஸ்கிராப்பிங் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன் படி வாகன அழிப்பு திட்டம் மூலமாக நாடு முழுவதும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பழைய வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க அரசு திட்டமிட்டு வந்தது.

மீண்டும் உயிரை காவு வாங்க தொடங்கிய கொரோனா தொற்று – அதிகரிக்கும் பதற்றம்!

அதன் பின் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்த தடை மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பழைய பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில், உள்ள 15 ஆண்டுகள் பழமையான 1650 பேருந்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இன்னும் வாங்கப்படாமல் இருப்பதால், பேருந்து வசதி இல்லாமல் கிராமப்புற மக்கள் அவதியில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!