தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லியாக ‘தெய்வமகள்’ காயத்ரி – வெளியான ப்ரோமோ!
தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” மெகா தொடரின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் புதிய மெகா தொடராக “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் ஒளிபரப்பபட்டு வருகின்றது. அதில் கதாநாயகன் தமிழ் தனது அம்மாவின் மேல் அதிக அளவில் பாசம் வைத்துள்ளார். அவர் படிக்காத காரணத்தால், அவரை திருமணம் செய்ய முடியாது என்று அவரது அத்தை பெண் மது மறுத்து விடுகிறார். இதனால் மனம் உடைந்து போகும் தமிழ் சாமியிடம் முறையிட, அதனை ஓரமாக நின்று கேட்கும் கதாநாயகி சரஸ்வதி அவருக்கு ஒரு பெண் கூடிய விரைவில் கிடைப்பாள் என்று கூறுகிறார்.
சரவணனின் கடையை மூடிய ஆபிசர், சந்தியா செய்த காரியம் – ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இப்படியாக இருக்க, தமிழின் தம்பி கார்த்தி சப் கலெக்டர் சந்திரகலா பெண்ணை காதலிக்கிறார். அவர் வசுந்தராவிற்கு அடுத்த 2 மாதங்களுக்குள் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று அவரது அம்மா கூறி விடுகிறார். இதனால் செய்வதறியாது திகைக்கும் கார்த்தி அதனை தனது அண்ணன் தமிழிடம் கூறுகிறார். அவர் நேரில் சென்று சந்திரகலாவை பார்க்கிறார். அங்கு சென்றதும் சந்திரகலா தாங்கள் பரம்பரையாகவே வசதியான குடும்பம் என்றும், தனக்கு சீக்கிரமாக எந்த விஷயம் நடைபெற்றால் தான் பிடிக்கும் என்றும் கூறுகிறார். அதனால் கார்த்தி மற்றும் வசுந்தரா திருமணம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
இதனை அமைதியாக கேட்கும் தமிழ், அவர் செல்லும் போது, தங்களது தாய் மற்றும் தந்தை இருவரும் கடினமாக உழைத்து தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அதனால் தனது அம்மாவிற்கு பிடித்தால் வசுந்தராவை கார்த்திக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து யோசிக்கலாம் என்று கூறி விட்டு சென்று விடுகிறார். கார்த்தி – வசுந்தரா திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வியுடன் ப்ரோமோ முடிவடைகிறது. இதில் வில்லி சந்திரகலா கதாபாத்திரத்தில் சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த “தெய்வமகள்” சீரியல் நடிகை காயத்ரி அறிமுகமாகி உள்ளார்.