சரவணனின் கடையை மூடிய ஆபிசர், சந்தியா செய்த காரியம் – ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி 2” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“ராஜா ராணி 2” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக தற்போது “ராஜா ராணி 2” ஒளிபரப்பட்டு வருகின்றது. இதில் படித்து ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியா சந்தர்ப்ப சூழல் காரணமாக ஸ்வீட் கடை வைத்து நடத்தும் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் சரவணன் பற்றி தெரியாமல் அவரை வெறுக்கும் சந்தியா, அவரது குணம் புரிந்ததும், அவரை விரும்புகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை விட்டு பிரியும் தனம்? களைகட்டிய வளைகாப்பு நிகழ்ச்சி!
சரவணனின் குடும்பம் சந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளும் போது, சரவணன் சந்தியாவிற்கு உற்ற துணையாகவும் இருக்கிறார். தற்போது சந்தியா தனது தோழியிடம் பேசியதை தவறாக புரிந்து கொள்ளும் சரவணன் அவரை வெறுக்கிறார். இப்படியாக இருக்க, சரவணனின் ஸ்வீட் கடைக்கு உணவுத்துறை அதிகாரி ஒருவர் வந்து லஞ்சம் வழங்க சொல்லி கேட்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் சந்தியா மிகந்த கோபம் அடைந்து அவரை திட்டி விடுகிறார். சந்தியா மற்றும் சரவணனை பழி தீர்க்க எண்ணி அந்த அதிகாரி கடையினை சீல் வைத்து விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
சந்தியா ஏற்கனவே அவர் தன்னை மிரட்டியதை வீடியோ எடுத்து அதனை அவரது மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி விடுகிறார். அதனை பார்க்கும் அவரது மேல் அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து விட்டு, கடையை திறக்க உத்தரவிடுகின்றனர். இதனால் நிம்மதி அடையும் குடும்பத்தினர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றனர். அதற்கு அவர்கள் சந்தியாவிற்கு நன்றி கூறுமாறு கூறி விட்டு சென்று விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.