வசு பற்றிய உண்மையை கார்த்திக்கிடம் சொன்ன ஹேமா, முதலிரவிற்கு தயாராகும் மணமக்கள் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

0
வசு பற்றிய உண்மையை கார்த்திக்கிடம் சொன்ன ஹேமா, முதலிரவிற்கு தயாராகும் மணமக்கள் - இன்றைய
வசு பற்றிய உண்மையை கார்த்திக்கிடம் சொன்ன ஹேமா, முதலிரவிற்கு தயாராகும் மணமக்கள் - இன்றைய "தமிழும் சரஸ்வதியும்" எபிசோட்!
வசு பற்றிய உண்மையை கார்த்திக்கிடம் சொன்ன ஹேமா, முதலிரவிற்கு தயாராகும் மணமக்கள் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கார்த்தி தமிழை பார்த்து பேச வசு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண் அதனால் அவளிடம் நீ பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். பின் ஹேமா கார்த்திக்கிடம் வசு பற்றி சொல்கிறார்.

தமிழும் சரஸ்வதியும்:

இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழ் கார்த்திக் அழைத்து வசு பற்றி அறிவுரை சொல்கிறார். அப்போது வசு பெரிய இடத்தில் வளர்ந்த பெண் அவள் முன்ன பின்ன நடந்து கொண்டாலும் நீ தான் பொறுமையாக இருக்க வேண்டும். வசு மீது கோவப்படாமல் நீ நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை சொல்கிறார். கார்த்திக் நீ சொன்னது போலவே நடந்து கொள்கிறேன் என சொல்கிறார். பின் கார்த்திக்கை ஹேமா தனியாக சந்தித்து மகாபலிபுரத்தில் நடந்தது அனைத்தும் வசு திட்டமிட்டு தான் நடக்கிறது என சொல்கிறார்.

மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!

அதை கேட்டு கார்த்திக் கோவப்பட, ஹேமா நீ நான் தான் உன்னிடம் சொன்னேன் என யாரிடமும் சொல்லிடாதே அப்படி தெரிந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்கிறார். பின் சரஸ்வதி மின்னலிடம் கல்யாணம் எப்படி நடக்கும் என புலம்பிக் கொண்டிருக்க, எப்போ பார்த்தாலும் நெகடிவாக தான் பேசுகிறாய் என சொல்கிறார். பின் மின்னல் சரஸ்வதி தமிழிற்கு FLAMES போட்டு பார்க்கிறார். அதில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என வருகிறது. அதை பார்த்து சரஸ்வதி சந்தோசமாக இருக்கிறார். மறுபக்கம் வசு கார்த்திக் முதலிரவிற்கு தயாராக கோதை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறார்.

இருவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என சொல்லி அனுப்ப சந்திரகலாவிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். பின் கோதை தமிழை நினைத்து வருத்தப்படுகிறார். அவர் வருத்தப்படுவதை தமிழ் அப்பா பார்க்க, சந்திரகலா வசுவிடம் எல்லாம் சொல்லி அனுப்புகிறார். நீ படித்த பெண் நீ நடந்து கொள்வது எல்லாம் உனக்கு தெரியும் என சொல்கிறார். வசுவிடம் பால் கொடுத்து ஹேமா அழைத்து செல்கிறார். சந்திரகலா கிளம்ப, நமச்சி கிளம்புகிறார். நானும் உன்னுடன் வரேன் என தமிழ் கிளம்ப கோதை தமிழை நினைத்து வருத்தப்படுகிறார். தமிழிற்கு தான் எல்லாம் நடந்து முடிந்திருக்க வேண்டும் என கோதை சொல்ல, தமிழ் எதிர்காலம் எல்லாம் நல்லபடியாக நடக்க போகிறது என தமிழின் அப்பா சொல்கிறார்.

கதிர் பணம் கொடுக்காததை தெரிந்துக் கொண்ட மூர்த்தி, தப்பே செய்யாமல் திட்டு வாங்கியதால் கோவப்படும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

தமிழ் கல்யாண வேலை எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்தான். அப்போது யாரவது எதாவது சொல்லிருப்பாங்க என கோதை கண் கலங்க இன்று நம்ம வம்சம் விருத்தமடையும் நாள் இன்று அழ கூடாது என தமிழ் அப்பா சொல்கிறார். வசு அழகாக அலங்காரம் செய்திருக்கும் ரூமிற்குள் போகிறார். அப்போது கார்த்திக் காத்துக் கொண்டிருக்க, வசு சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் கார்த்திக் எதுவும் பேசாமல் இருக்க, பேபி என வசு கார்த்திகை கூப்பிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!