தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அச்சம் – துணிகள் ஏற்றுமதி நிறுத்தம்!!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக ஈரோட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி பணிகள்:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இப்படி இருக்க தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் துணிகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம், சித்தோடு உள்ளிட்ட பல பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இடங்களில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி வியாபாரங்கள் தடைபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று ஜவுளி வியாபாரிகள் பலரும் கணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கணினி உதவியாளர் பணி – ஓராண்டு காலம் நீட்டிப்பு!!
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறுகையில், ‘வட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக ஜவுளி ஆர்டர்கள் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் வழக்கத்தை விட குறைவாக காணப்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், ஜவுளிகள் ஏற்றுமதி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்