TET தேர்விற்கான தேதியில் மாற்றம் – வலுக்கும் கோரிக்கை!!
டிச.24ம் தேதி கீதை பாடுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் TET தேர்விற்கான தேதியை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
TET தேர்வு:
கொல்கத்தாவில் மூன்று மத அமைப்புகளின் சங்கமாக விளங்கும் லோக்கோ கொண்டே கீதாபதா கமிட்டி சார்பில் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி ஒரு லட்சம் குரலில் கீதை பாடுதல் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு பகவத் கீதை வசனங்களைப் பாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
TNTET தேர்வர்களுக்கு முக்கிய தகவல் – இந்த விஷயம் தெரியுமா?
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச.24ம் தேதி டெட் தேர்வும் நடைபெற இருப்பதால் தேர்வெழுதும் தேர்வாளர்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. இதனால், டெட் தேர்வுக்கான தேதியை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.