தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு – ஆணையை வழங்கிய முதல்வர்!

0
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - ஆணையை வழங்கிய முதல்வர்!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - ஆணையை வழங்கிய முதல்வர்!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு – ஆணையை வழங்கிய முதல்வர்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையதுறையின் கீழ் பல கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தொகுப்பூதியம்:

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையதுறையின் கீழ் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் தெரிவித்தார். இந்த கல்லூரிகளை அமைக்க தமிழக உயர் கல்வித்துறையும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம் – ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்!

Follow our Instagram for more Latest Updates

இந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம், புதுப்புளியம்பட்டி ஆகிய இடங்களில் 3 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டில் மேலும் புதிய கல்லூரிகள் இந்து அறநிலையத்துறை சார்பாக தொடங்கப்பட்டது.

இந்த கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுப்பூதிய ஆணையை வழங்கினார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!