தமிழகத்தில் பல நாட்களாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம் – அரசு அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் பல நாட்களாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம்:
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு இல்லாமல் நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும், பணிக்கு ஏற்ப சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல நாட்களாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
அதாவது, தமிழகத்தில் 10,359 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் தற்போது வரை ரூ.10,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.12,500 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனாலும், ஆசிரியர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஒவ்வொரு ஆசிரியர்களின் குறைகளையும் கேட்டறிந்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதல்வர் அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.