டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி – வலுக்கும் கோரிக்கை!!
தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என பாமக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெட் தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தற்போது வரையிலும் பணியிடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அடிப்படையில் மட்டுமே பணியிடம் வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். ஆனாலும், தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள் – நவ.19ல் எழுத்து தேர்வு!
இந்நிலையில், போட்டித்தேர்வுகள் இல்லாமல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என தற்போது வரையிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்கிற உத்திரவாதத்தை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ. தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.