TCS நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இனி பணிநீக்கம் இல்லை!!
உலகளவில் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கைகளுக்கு மத்தியில், TCS நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)தனது ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகளவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் சூழலில் TCS நிறுவனம் தனது ஊழியர்களை இனி பணிநீக்கம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதாவது, ‘ஒருமுறை ஊழியர்களை பணியமர்த்திய பிறகு பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு இனி இடமில்லை.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் – முக்கிய செயல்முறைகள் வெளியீடு!
ஊழியர்களின் செயல்பாடுகள் சரி இல்லை என்றால் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்’ என்று இந்நிறுவனத்தின் CHRO மிலிந்த் லக்காட் கூறியுள்ளார். மேலும், தேவைக்கு அதிகமாக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதால், மற்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது TCS நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றுள்ளது.