TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!

0
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!
TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்கள் தற்போது 2022ம் நிதியாண்டில் 1 லட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்புகள்:

2022ம் ஆண்டு ஐடி துறையில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் போன்றவை 2022ம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் 3ம் காலாண்டு முடிவுகளை அறிவித்த போது புதிய நியமனங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டது. கடந்த ஆண்டில் ஐந்தே நிறுவனங்கள் தங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து 2022ம் நிதியாண்டில் பணியமர்த்தல் முடிவை தொடர இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆண் குழந்தைகளுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – பொன்மகன் திட்டத்தின் அம்சங்கள்!

இந்த நிறுவனங்களின் அதிகாரபூர்வ அறிக்கையின் படி, 2021 இல் சாதனையாக 1.7 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர். இதுவே 2020ம் ஆண்டில் வெறும் 31,000 ஆக மட்டுமே இருந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணத்தினால் அதிக தேவைகளை சந்தித்த டிஜிட்டல் உலகம் அதிக ஊழியர்களை நியமிக்க தொடங்கியது. நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமான Infosys 2022ம் நிதியாண்டில் 55,000 க்கும் மேற்பட்ட புதியவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யுமான சலில் பரேக், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணியாளர்களை அதே சமயத்தில் பணியாளர்களின் திறன் மற்றும் நல்வாழ்வை மேலும் அதிகமாக்கும் பணிகளையும் செய்வதாக கூறியுள்ளார்.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் சமீபத்தில் 2,00,000 பணியாளர்களை நியமித்தது. இந்தியாவில் தொழிலாளர் எண்ணிக்கையில் டிசிஎஸ் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. முன்னதாக, டிசிஎஸ் மார்ச் மாதத்திற்குள் 34,000 புதியவர்களை பணியமர்த்துவதாக அறிவித்தது, இந்த இலக்கை நிறுவனம் அடைந்துள்ளதால் 2023ம் நிதியாண்டிற்குள் 30,000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆம் நிதியாண்டில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 17,500 ஆக இருக்கும் என்றும் விப்ரோவின் தலைவர் மற்றும் சிஎச்ஆர்ஓ சௌரப் கோவில் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!