ஆகஸ்ட் 8ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாக ஞாயிற்று கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சில தினங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆடி மாதத்தை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை – ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியீடு!
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அம்மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும், மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, துடியலூர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இதனால் தொற்று எளிதாக பரவ வாய்ப்பு அதிகரிக்கும். எனவே நாளை (07.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று டாஸ்மாக் கடையினை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.