தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு!!

0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதாக அரசு உத்தரவிட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டாஸ்மாக் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் பின்னர் பல்வேறு விதிமுறைகளுடன் திறக்கப்பட்டன. பின்னர் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி மே மாதம் 7ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய நாள் பொது விடுமுறை விடப்பட்டு, அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – அரசு தேர்வுத்துறை தகவல்!!

இன்று 234 தொகுதிகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி ஒருநாள் என நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என கூறப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!