Tangedcoவின் புதிய திட்டம்.. இனி கரண்ட் பிரச்சனை வராது – களத்தில் இறங்கும் அதிகாரிகள்!

0
Tangedcoவின் புதிய திட்டம்.. இனி கரண்ட் பிரச்சனை வராது - களத்தில் இறங்கும் அதிகாரிகள்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) மூலம் மின் வாரிய ஊழியர்கள் மூலம் களத்திற்கே நேரடியாக வந்து புகாரை பதிவு செய்யும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது,

புதிய திட்டம்

தமிழகத்தில் மின் வாரிய துறையின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான இது சுமார் 15 ஆண்டுகளாக சேவை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் கீழ் எண்ணூர், மேட்டூர், வடசென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 4770 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சென்னை டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மேலும் மின்சார வாரியத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மின்சாரம் குறித்த பிரச்சனை வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சனைகள் மின்சார வாரியத்தால் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணவில்லை. எனவே புகார்கள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இதனால் இந்த பிரச்சனைகளை சரி செய்ய Tangedco நிர்வாகம் புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மின் வாரியத்தின் கள அதிகாரிகள் நேரடியாக வருவார்கள். பொதுமக்கள் தங்களின் பிரச்சனை குறித்து அளிக்கலாம். குறிப்பாக பழுதான மின் மீட்டர்கள், மின் பயன்பாடு தவறாக பதிவு செய்யப்படுவது, புதிய மின் இணைப்புகளுக்கான கோரிக்கைகள் கேட்கலாம். இந்த ஆப் பெயர் FSMAPP என்பதாகும். தேர்தல் காரணமாக இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!