3 நாட்களுக்கு பின் மக்களை அதிர்ச்சி ஆக்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
மக்கள் மத்தியில் மிக சிறந்த முதலீடு பொருளாக இருக்கும் தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலையானது குறைந்த நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை:
தங்கம் என்பது ஒரு ஆடம்பர பொருளாக இல்லாமல் முதலீடு செய்ய உகந்ததாக இருக்கிறது. அதனால் பலர் தங்கம் விலை எவ்வளவு இருந்தாலும் அதில் முதலீடு செய்ய தயங்குவது இல்லை. இந்நிலையில் தங்கம் விலையானது ஒரு நாள் உயர்வையும் ஒரு நாள் குறைவையும் சந்தித்து வருகிறது. அதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தினமும் தங்கம் விலையை தெரிந்து கொண்டு வாங்கலாம். அந்த வகையில் தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்தது.
தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
Exams Daily Mobile App Download
அதனால் நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் அதிகரித்துள்ளது. அதன் படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.4,936 எனவும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ரூ.39,488ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறது, அதன் படி வெள்ளி கிராம் ரூ.68 எனவும், கிலோ ரூ.68,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.