தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் – புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனம் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று புதியவகை பீர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
புது வகை பீர்
தமிழக அரசின் முக்கியமான நிதி டாஸ்மாக் மூலமாக வருகிறது. அந்த வகையில் தமிழக மக்களுக்கு குடியின் தேவை இருக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் புதிய வகை பீர் விற்பனை செய்ய வேண்டும் என குடிமகன்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில் தற்போது புதிய வகை பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் வருமானம் – போஸ்ட் ஆஃபீஸின் அட்டகாசமான திட்டம்!!
இந்த பீர் ‘தண்டர்போல்ட் ஸ்ட்ராங்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய வகை பீர் நேற்று முன்தினம் இரவு முதல் அனைத்து மதுக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 160 ஆகும். இதே போல ‘காட்பாதர்’ என்ற பீரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக இன்னும் 4 அல்லது 5 வகை பீர்கள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.