தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – மீறினால் கடும் நடவடிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அடைப்பு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலை ஒழுங்காகவும், வன்முறையின்றி நடத்தவும், தேர்தல் பணிகளை கவனிக்கவும் 235 துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அறிவித்தபடி ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு முடிவடைகிறது.
TN Job “FB Group” Join Now
இதைத்தொடர்ந்து மே மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணிகள் ஆரம்பமாகும். இந்நிலையில் சட்டசபை தேர்தலை சட்டம் ஒழுங்கோடு நடத்த டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் தேதியான ஏப்ரல் 6 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் மே 2 மற்றும் ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு சில்லறை விற்பனை கடைகளின் விதிப்படி டாஸ்மாக் கடைகள், பார்கள், தமிழ்நாடு ஓட்டல் யூனிட் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 10 நாட்கள் விடுமுறை – பட்டியல் வெளியீடு!!
இந்த தினங்களில் மதுபானங்களை விற்கவோ, பிற இடங்களுக்கு எடுத்து செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்யவோ, வேறு இடங்களுக்கு மாற்றவோ முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் காவல் துறையை அணுகி உடனடியாக புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.