தமிழகத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு – அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!
தமிழக பள்ளிகளில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு டிசம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இந்த தேர்வு அக்.15 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா? உங்களது வரம்பு இது தான்.. விவரம் இதோ!
அந்த வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் டிச. 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் ரூ.1500 மாணவர்களுக்கு மாதம் ரூ. 1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.