தமிழகத்தில் பொதுத்தேர்வு அறிவிப்பு – தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!
தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
வெளியான உத்தரவு
தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-24ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது.அதாவது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பொதுதேர்விற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
TNPSC முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான வழிகள் இதோ!!
அதில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரியாக எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், மதிபோன் பட்டியலில் மாணவர்களின் பெயர் பிழையாக வந்தால் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியரும், பள்ளி ஆசிரியருமே பொறுப்பேற்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையிலேயே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் உள்ளிட்ட 13 தகவல்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதில் எதாவது திருத்தங்கள் இருந்தால் அதை உடனே செய்ய வேண்டும். இந்த பணிகளை நவம்பர் 30ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். அதே போல மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின் திருத்தங்கள் கோரி தேர்வு துறைக்கு விண்ணப்பம் அனுப்ப கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.