தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கருத்துகேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் அளித்த அனுமதியை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டன. விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் பிற வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜனவரி 29ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை ஆன்லைனில் நடைபெறும் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் உறுதிபட கூறி உள்ளார்.
UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – 2000 பேர் விண்ணப்பம்!!
பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர்த்து, பிற வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது கடந்த ஆண்டை போல் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என அமைச்சர் பதில் அளித்துள்ளார். இதனால் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Use full news good news for me 😌
Don’t opean school for 11th