தமிழகத்தில் மாநில அரசு செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் குறித்தான ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
காலை உணவு திட்டம்:
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக தனது தேர்தல் வாக்குறுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தது. முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்களுக்கு சிற்றுண்டி உணவு வகைகள் முன்னதாக தயாரிக்கப்பட்ட அட்டவணையின் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை உணவு திட்டம் குறித்தான மாநில திட்டக் குழுவின் ஆய்வு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே படித்து எளிமையா பாஸ் பண்ணுங்க – முழு விவரம் இதோ!
அதன்படி காலை உணவு திட்டத்தின் விளைவாக பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்ததுடன், கற்றல் திறனும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் 88 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே பள்ளிக்கு வந்து விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.