தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 100% பொருள்கள் இறக்குமதி – உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணி நடைபெறுவதால் ரேஷன் கடையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் குறைபாடு ஏற்படக்கூடாது என அரசு துறை அலுவலர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் பணிகள்:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல அரசியல் காட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அரசியல் களம் சூடுபிடித்துள்ளதால் மக்களின் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் தாமதம் காட்ட கூடாது என அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல அரசு துறை சார்ந்த அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள நிலையில் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடாது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் கடையை நம்பி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடைகளுக்கு வரும் மக்களுக்கு பொருள்கள் இல்லை என கூறி அனுப்ப கூடாது. இதற்கு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் 100% ரேஷன் பொருள்களை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
உலக மகளிர் தின சிறப்பு விருதுகள் – இரண்டாம் இடத்தில் தமிழிசை சவுந்தரராஜன்!!
இதற்கான பொருள்கள் ஓரிரு நாட்களில் வந்து சேர்க்கப்படும். மக்கள் அதன் மூலமாக அணைத்து பொருள்களையும் பெற்று கொள்ளலாம். பொருள்கள் பெற்றுக்கொண்டதும் அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்செய்தி அனுப்பப்படும். இந்த அறிவிப்பு மூலமாக ரேஷன் கடையை நம்பி உள்ள பல மக்கள் பயனடைவார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Best in subjects in news!