ரேஷன் கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை.. கார்டு ரத்தாக வாய்ப்பு!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை.. கார்டு ரத்தாக வாய்ப்பு!!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை.. கார்டு ரத்தாக வாய்ப்பு!!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை.. கார்டு ரத்தாக வாய்ப்பு!!

தமிழகத்தில் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை நியாயவிலை கடை பணியாளர்கள் விடுத்துள்ளனர்.

ரேஷன் கார்டு

தமிழக மக்களுக்கு முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அதன் மூலம், மலிவு விலையில் உணவு பொருட்களும், அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுமார் 2.20 கோடிக்கு அதிகமான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அதில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என வெவ்வேறு பிரிவுகளில் அட்டைதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை நியாயவிலை கடை பணியாளர்கள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தாறுமாறாக உயரும் இஞ்சி பூண்டு விலை – முழு பட்டியல் இதோ!

அதாவது, தற்போது நியாயவிலை கடை பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு செல்வதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. அதில் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே நியாயவிலை கடைகளுக்கு சென்று விரல் ரேகையை பதிவிட்டு பொருட்கள் வாங்க முடியும். இந்த மாதத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் கட்டாயம் வந்து விரல்ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர். இதனால் மக்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் அவர்களால் ரேஷன் கடைகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!