தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி அரிசி, பருப்பு இல்லையா.. காரணம் என்ன?
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ரேஷன் கடைகளில் இலவச அரசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், தமிழக மக்களுக்கு பாதிப்பு என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
ரேஷன் கடைகள்
மத்திய அரசு மாநிலங்களில் பருப்பு பதுக்கம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் உளுந்து போன்றவற்றின் கொள்முதல் குறைந்துவிட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு எளிதாக பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மாநிலங்களில் இருக்கும் பொறுப்புகளில் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுகளுக்கும், அந்தியோதயா கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதில் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான அரிசியை, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. மற்ற கார்டுதார்களுக்கு இந்திய உணவு கழகத்திடம் இருந்து, தமிழக நுகர்வோர் வாணிப கழகம் வாங்குகிறது. இந்நிலையில் திடீரென அரிசி, பருப்பு விநியோகத்தை அரசு நிறுத்தி இருப்பதால் தமிழக மக்கள் பீதியில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் – வலுக்கும் கோரிக்கையால் தீர்மானம் நிறைவேற்றம்!
ஆனால் இது குறித்து வெளியான அறிவிப்பில் விவசாயிகளிடமிருந்து, 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7.50 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது. அதனால் மத்திய அரசு இந்த அறிவிப்பை அமல்படுத்தி அரசி விற்பனையை நிறுத்தினாலும் தமிழக ரேஷன் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பாடாது என தகவல் வெளியாகி இருக்கிறது.