தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 22) மழை பெய்யும் – வானிலை மையம் அலர்ட்!

0
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 22) மழை பெய்யும் - வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் இன்றும் (ஏப்ரல் 22), நாளையும் (ஏப்ரல் 23) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதன் படி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் ஏப்ரல் 22, 23 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 22, 23 ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

BHEL நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,10,400/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

அது மட்டுமில்லாமல் ஏப்ரல் 24,25 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், ஏனைய தமிழக மாவதனால் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று (ஏப்ரல் 21) 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!