கூடங்குளம் மின்சார நிலுவைதொகை ரூ.2509 கோடி – சிக்கலில் தமிழக மின் வாரியம் ! உடனே செலுத்த வலியுறுத்தல்!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையம் மூலம் தமிழகத்திற்கு தினமும் 1152மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக 2509 கோடி ரூபாயை தமிழக மின் வாரியம் நிலுவை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவை தொகை:
இந்திய-ரஷ்யா கூட்டு முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உலைகளில் முதலாவது அணு உலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் அணுப் பிளவு நடத்தப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மேலும் இந்த அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்க்கு தினமும் 1152 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய அமைப்பு பணிகள் தீவிரம் – மத்திய அமைச்சர் கோரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
மீதமுள்ள அளவிலான மின்சாரம் ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. மேலும் இது தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக 2509 கோடி ரூபாயை தமிழக மின் வாரியம் நிலுவை வைத்துள்ளது. அதை விரைந்து வழங்குமாறு தமிழக மின் வாரியத்தை அணு மின் கழகம் வலியுறுத்தி உள்ளது.