பொங்கல் பரிசு ரூ.2500 பெற முடியாதவர்கள், பண்டிகை முடிந்து பெறலாமா?? அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு!!
தமிழகத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில், அதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் பெற முடியாதவர்கள் பண்டிகை முடிந்தும் பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்து உள்ளார்.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசினை உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். அதன்படி ரூ.2500 ரொக்கம், முழு கரும்பு மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
பணியின் போது ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு, டோக்கன் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் சிலரால் பொங்கல் பரிசினை குறிப்பிட்ட நாட்களுக்குள் பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அவர்களுக்கு பொங்கல் பரிசு பண்டிகை முடிந்தும் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அமைச்சர் இன்று பதில் அளித்துள்ளார்.
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பியூசி வகுப்புகள் தொடக்கம்!!
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் காலை 100 மற்றும் மாலை 100 நபர்கள் என பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பண்டிகைக்கு முன்னரே வாங்க முடியாதவர்கள், பண்டிகை முடிந்தும் ஜனவரி 18ம் தேதி அதனை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்