தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு – மார்ச் 15 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வரும் மார்ச் 15ம் தேதி முதல் முதல் பருவத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முதல் பகுதியில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
முதல் பருவத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 11 மாதங்களுக்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ள நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!!
மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு வரும் மார்ச் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 18 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 11.45 மணி முதல் 12.45 மற்றும் மாலை 3 மணிமுதல் 4.30 வரை தேர்வுகள் நடைபெறும். அதற்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது.
TN Job “FB
Group” Join Now
- மார்ச் 15 – கணிதம், தாவரவியல், பொருளாதாரம், ஆங்கிலம்
- மார்ச் 16 – இயற்பியல், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, அரசியல், அறிவியல்
- மார்ச் 17 – உயிரியல், விலங்கியல், வணிகக்கணிதம், புள்ளியியல், வரலாறு, டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி, தமிழ்
- மார்ச் 18 – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்