தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், அதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசிடம் கோரிக்கை
தமிழகத்தில் தேர்தலின் போது முதல்வர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அது குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று (ஜன. 23) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 12 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் இதுவரை ரூ.10ஆயிரம் தொகுப்பூதியத்தில் வேலை செய்து வருகின்றனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் ஸ்டாலின் ஒரு கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உதவித்தொகை வழங்கியது போல 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.