கல்லூரி படிப்பை தொடர முடியவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!

0
கல்லூரி படிப்பை தொடர முடியவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!

வறுமையை காரணம் காட்டி உயர்கல்வியை தொடராமல் இருக்கும் மாணவியர்களுக்கு தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

பள்ளி கல்வித்துறை:

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களும் பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வியை தொடரும்போது ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியை தொடராமல் இருக்கும் மாணவ, மாணவியர்களின் விவரங்களை பெற்று அவர்களும் உயர் கல்வியை தொடர்வதற்காக அரசு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், வறுமையை காரணம் காட்டி படிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பள்ளிப்படிப்பு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும் என்பதே அரசின் முழு கொள்கையாக இருந்து வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!