தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – அரசு தேர்வுத்துறை திட்டம்!!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், ஜூன் மாதத்தில் தேர்வுகளை நடத்த அரசு தேர்வுத்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 12ம் வகுப்பிறகு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதிக்கு பின்னர் பிளஸ் 2 மாணவர்களுக்கு முழுவதுமாக விடுமுறை விடப்பட உள்ளது. தற்போது கிடுகிடுவென உயர்ந்து வரும் கொரோனா 2வது அலை இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது. இதற்காக தடுப்பூசி செலுத்துதல், கட்டுப்பாடு நெறிமுறைகளை வகுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ஏப்ரல் 20 முதல் அமல்!!
எனவே ஒத்திவைக்கப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூன் மாதம் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு தேர்வுத்துறை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. புதிய அட்டவணை தேர்வு நடைபெற உள்ள 15 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அரசு தேர்வுத்துறை சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.