தமிழகத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – வெளியான அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு - வெளியான அதிரடி
தமிழகத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – வெளியான அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்து அரசாணை வெளியாகி இருக்கிறது.

ஆடை கட்டுப்பாடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்படி உடை அணிய வேண்டும் என பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களின் ஆடை என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் எல்லாரை போல எங்களுக்கும் ஆடை சுதந்திரம் இருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (NSS) அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள் தமிழ்நாடு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடை அணியலாம் எனவும், மகளிர் அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடக்கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

வங்கி அதிகாரியாகும் உங்கள் லட்சியம் ஜெயிக்க வேண்டுமா? – இது தான் சரியான சாய்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!