தமிழக அரசின் ரூ.6000 வெள்ள நிவாரணம் – எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?? அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசின் ரூ.6000 வெள்ள நிவாரணம் - எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?? அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் ரூ.6000 வெள்ள நிவாரணம் - எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?? அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் ரூ.6000 வெள்ள நிவாரணம் – எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?? அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரூ. 6000 வெள்ள நிவாரணம் குறித்து அரசாணை வெளியாகி இருக்கிறது.

வெள்ள நிவாரணம்

தமிழகத்தில் டிச. 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அதனால் தமிழக அரசு அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இதற்கான அரசாணை வெளியாகி இருக்கிறது. அதன் படி சென்னையில் அனைத்து வட்டங்களிலும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த 4 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் படி இந்த நிவாரணம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படும்.

ரூ.50 லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் SBI வங்கி – ‘இந்த’ கணக்கு மட்டும் போதும்!

அதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுவதும், ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தை பாதிக்கப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள், வருமான வரி செலுத்துபவர்கள், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களுடைய விவரங்களை வங்கி கணக்கு தகவலுடன் அருகே உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!