தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து கோவை வேட்பாளர் அண்ணாமலை பரபரப்புரை ஆற்றியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முக்கியமான அரசியல் கட்சிகள் மக்களுக்கு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் பாஜக வாக்குறுதி குறித்து கோவை வேட்பாளர் அண்ணாமலை பரபரப்புரையாற்றியுள்ளார். அதில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
TNPSC தேர்வர்களுக்கு தமிழ் புத்தாண்டு சலுகை – ஒரே லைவ்.. 1000 கேள்விகள்!!
மேலும் பேசிய அவர் கோவை விமான நிலையம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் எனவும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் நதிநீர் இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். அதுமட்டுமல்லாமல் காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.