தமிழகத்தில் ஏப்ரல் 13 வரை பூத் சிலிப் வழங்க ஏற்பாடு – வெளியான தகவல்!

0
தமிழகத்தில் ஏப்ரல் 13 வரை பூத் சிலிப் வழங்க ஏற்பாடு - வெளியான தகவல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பூத் சிலிப் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பூத் சிலிப்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப் ) வழங்கும் பணி ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. வாக்காளர் வழிகாட்டி கையேடும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.

வேட்பாளர் அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிட அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இதுவரை 3.60 கோடி மக்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் பூத் சிலிப் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார். அது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!