மார்ச் 13ம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற மார்ச் 13 ஆம் தேதி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் கோவில் திருவிழாவை காரணமாக வைத்து உள்ளூர் விடுமுறை விடுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு குறித்து இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. கோவில் திருவிழாக்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமானோர் வருவார்கள். அவர்களின் வசதிக்காக விடுமுறை விட வேண்டும் என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற மார்ச் 13 ஆம் தேதி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது.
வங்கியில் வேலை செய்ய விருப்பமா..? ரூ.8 9890/- சம்பளத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்புகள்!
அந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் அரசு அலுவலகங்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்ய ஏப்ரல் 1 ஆம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.