தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் டிசம்பர் மாதம் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சிலிண்டர் விலை
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாத முதல் நாளான இன்று சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை உள்ள சமையல் சிலிண்டர் விலை அதிகரித்து இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதில் சிக்கல் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தற்போது வெளியான புதிய அறிவிப்பின் படி சென்னையில் நேற்று வரை ரூ.1942க்கு விற்கப்பட்ட சிலிண்டர் ரூ.26.50 உயர்ந்து ரூ.1968க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. வணிக சிலிண்டர் விலை நவம்பர் மாதம் குறைந்த நிலையில் திடீரென உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதே போல வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், ரூ.918க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.