தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சுழற்சி அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ஆரம்பிப்பது குறித்து உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
NIFT நுழைவுத்தேர்வு 2021 – விண்ணப்பிக்க கடைசி நாள்!!
இதன்படி அடுத்த ஆண்டு முதல் கல்லூரிகளில் உள்ள மற்ற ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா பரவலை தடுக்க ஒரு வகுப்பிற்கு 25 முதல் 30 மாணவர்கள் மட்டும் அமர வைத்து மற்ற மாணவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகங்கள், வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.
மினி கிளினிக்குகளில் 1,415 செவிலியர் & 585 உதவியாளர் பணியிடங்கள் – ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு!!
கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் வெப்பநிலை மற்றும் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்